உள்ளூர் செய்திகள்

திற்பரப்பு, திருவட்டார் பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை

Published On 2023-10-09 06:59 GMT   |   Update On 2023-10-09 06:59 GMT
  • காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது
  • தக்கலை மின் வினியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில் :

வீயன்னூர், பேச்சிப்பாறை துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (புதன்கிழமை) நடக்கிறது. எனவே, நாளை மறுநாள் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வீயன்னூர் மின் நிலைய பகுதிகளான ஆற்றூர், திருவட்டார், செரும்பாலூர், வெண்டலிகோடு, வலி யாற்று முகம், பிலாவிளை, குமரன்குடி, பூவன்கோடு, வேர்க்கிளம்பி, மணலிக்கரை, மணக்கா விளை, முகிலன்கரை, பெருஞ்சக்கோணம், காயல்கரை, சித்திரங்கோடு, சாண்டம், ஆத்துக்கோணம் ஆகிய இடங்களுக்கும், பேச்சிப்பாறை மின் நிலைய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 வரை கடை யாலுமூடு, கோதையார், குற்றியார், மைலார், உண்ணி யூர்கோணம், சிற்றார், களியல், ஆலஞ்சோலை, பத்துகாணி, திற்பரப்பு, திருநந்திக்கரை, அரசமூடு ஆகிய இடங்களுக்கும், அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை தக்கலை மின் வினியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News