உள்ளூர் செய்திகள்

வடசேரி பேருந்து நிலையத்தில் அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி

Published On 2023-10-21 06:44 GMT   |   Update On 2023-10-21 06:44 GMT
  • பொதுமக்கள் திரளானோர் பார்வையிட்டனர்
  • பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கியது.

நாகர்கோவில் :

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடசேரி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப் படக்கண்காட்சி நடை பெற்றது.

இதில் முதல்- அமைச்ச ரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட்டம், மக்களை தேடி மருத்துவம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளு படி திட்டம், நரிக்குரவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை யினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப் பட்டதை நேரில் பார்வை யிட்டது. இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டம், விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம், கலை ஞரின் வரும்முன் காப்போம் திட்டம், நமக்கு நாமே திட்டம் மற்றும் நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம், காணி பழங்குடியி னர்களுக்கு நிலஉரிமை ஆணை வழங்கியது உள்ளிட்ட பல்வேறு துறை களின் சார்பில் முதல்-அமைச்சரால் வழங்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியின்போது கால மானவர்களின் வாரி சுதாரர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கியது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கியது. காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம் குறித்தும், பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப் படுத்தப்பட்டது.

மேலும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் நலத் திட்ட உதவிகள் வழங்கியது. மாநில அளவிலான விளை யாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தது உள்ளிட்ட பல்வேறு திட்டங் கள் குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக அமைக்கப் பட்டிருந்த புகைப்பட கண் காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டு பயன்பெற்றனர்.

Tags:    

Similar News