உள்ளூர் செய்திகள்

நெல் கொள்முதல் புகார்களுக்கு தொலைபேசி எண்கள்

Published On 2022-09-27 07:26 GMT   |   Update On 2022-09-27 07:26 GMT
  • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
  • இலவச தொலைபேசி எண்ணான 18005993540-ஐ தொடர்பு கொள்ளலாம்.

நாகர்கோவில்:

குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் நெல் பயிரிடும் விவசாயிகள் பயனடையும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழ கத்தினால் அந்தந்த மாவட்டங்களில் இந்திய அரசின் பரவ லாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் நலன் கருதி ஏற்கனவே நடைமுறையில் இருந்த அதாவது அடுத்த மாதம் அக்டோபர் 1-ந் தேதி திறக்கப்பட இருந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை முன்கூட் டியே செப்டம்பர் 1-ந்தேதி முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத் தில் நடப்பாண்டு 2022-2023-ல் கன்னிப்பூ கொள்முதல் பருவத்தில் தற்சமயம் 7 நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் திறக் கப்பட்டுள்ளன. இதனை விவசா யிகள் பயன்படுத்தி நெல் விற்பனை செய்ய லாம். நெல் கொள்முதல் நிலை யங்கள் செயல்பாடுகள் தொடர்பாக ஏதேனும் குறைபாடோ, புகாரோ இருப்பின் நுகர்பொருள் வாணிபக் கழக தலைமை அலுவலக இலவச தொலைபேசி எண்ணான 18005993540-ஐ தொடர்பு கொள்ளலாம்.

மேலும், கட்டுப்பாடு அறை எண்கள் 04652 261214, மாவட்ட கலெக்டர் அலுவலக வாட்ஸ் அப் எண் 9154154598 ஆகியவற்றில் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிக்குள் புகார் தெரிவிக்கலாம். விவசாயிகள் தெரிவிக்கும் கோரிக்கைகள் மற்றும் குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வு செய்யப்படும். அனைத்து விவசாயிகளும் ஒத்துழைப்பு நல்கிடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு மண்டல மேலாளர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சிறு தொழில் மையம், கோணம், நாகர்கோவில்-4 அலுவலக தொலைபேசி எண்.04652-251214-ஐ தொடர்பு கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Tags:    

Similar News