உள்ளூர் செய்திகள்
கொல்லங்கோடு அருகே பெட்ரோல் பங்க் ஊழியர் தற்கொலை
- மனவேதனையில் இருந்த மோகனன் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
நாகர்கோவில் :
கொல்லங்கோடு அருகே கொக்கறகுன்னு வெங்கஞ்சி பகுதியை சேர்ந்தவர் மோகனன் (வயது 58). இவர் குழித்துறையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் ஊழிய ராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் இவருக்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த மோகனன் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.