உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி வெங்கடாஜலபதி

கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலில் பவித்ர உற்சவம்

Published On 2022-11-01 12:27 IST   |   Update On 2022-11-01 12:27:00 IST
  • 3-ந்தேதி தொடங்குகிறது
  • கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ந்தேதி கும்பாபி ஷேகம் நடத்தப்பட்டு திறக்கப்பட்டது.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டுஉள்ளது.

இந்த கோவில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ந்தேதி கும்பாபி ஷேகம் நடத்தப்பட்டு திறக்கப்பட்டது. இந்த கோவில் கட்டி 3 ஆண்டுகள் ஆகிறது. இந்த கோவில் கட்டப்பட்ட பிறகுமுதல் முறையாக இந்த கோவிலில் பவித்ர உற்சவம் என்ற திருவிழா வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது. இந்த திருவிழா 6-ந்தேதி வரை 4 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. 3-ந்தேதி காலை 9 மணிக்கு ஆச்சாரிய ருத்வின்யம் நிகழ்ச்சியும் மாலை 6.30 மணிக்கு அங்குர அர்ப்பனமும்நடக்கிறது.

2-ம் திருவிழாவான 4-ந்தேதி காலை 8.30 மணிக்கு யாகசாலை பூஜை ஆரம்பமாகிறது. பின்னர் காலை 10.30 மணிக்கு உற்சவர்களுக்கு ஸ்னப்பன திருமஞ்சனம் சாத்துதலும் அபிஷேகமும் நடக்கிறது. மாலை 6.30 மணிக்குயாகசாலை பூஜைநடக்கிறது.3-ம்திருவிழாவான 5-ந்தேதி காலை 8.30 மணிக்கு யாகசாலை பூஜையும் 10.30 மணிக்கு உற்சவர்களுக்கு ஸ்னப்பன திருமஞ்சனம் சாத்துதலும் அபிஷேகமும் நடக்கிறது.

பகல் 12.00 மணிக்கு பவித்ர சமர்ப்பனமும் மாலை 6.30 மணிக்கு யாகசாலை பூஜையும் நடக்கிறது. 4-ம் திருவிழா வான 6-ந்தேதி காலை 8.30 மணிக்கு யாகசாலை பூஜையும் 10.30 மணிக்கு உற்சவர்களுக்கு ஸ்னப்பன திருமஞ்சனம் சாத்துதலும் அபிஷேகமும் நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவியுடன் வெங்கடாஜலபதி அலங்கரிக்கப்பட்ட வாக னத்தில் எழுந்தருளி நான்குமாடவீதிகளில் பவனி வரும் விமான பிரகார உற்சவம் நடக்கிறது. பின்னர் 6.30 மணிக்கு யாகசாலை பூஜையும் இரவு 8.30 மணிக்கு பூர்ணா குதி மற்றும் சிறப்பு மணி ஒலியுடன் விசேஷ பூஜையும் நடக்கிறது.

அதைத்தொடர்ந்து பகுமானம் அர்ச்சனையும் வெங்கடாஜலபதி சுவாமி யின் தலையில் அணி விக்கப்படும் கிரீடம் மூலம் பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கும் நிகழ்ச்சியும் 9 மணிக்கு ஏகாந்த சேவை யும் நடக்கிறது. இந்த பவித்ர உற்சவத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வைகானசா ஆகம ஆலோ சகர் ஸ்ரீ விஷ்ணு பட்டாச் சார்யலு தலைமையில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் உள்ள 7 அர்ச்ச கர்கள் நடத்துகிறார்கள்.

இந்த பவித்ர உற்சவத்துக் கான ஏற்பாடுகளை சென் னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் மற்றும் தகவல் ஆலோசனை மைய தலைவர் சேகர் ரெட்டி தலைமையில் தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் கன்னியாகுமரி வெங்கடா ஜலபதி கோவில் ஆய்வாளர் சாய்கிருஷ்ணா ஆகியோர் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News