உள்ளூர் செய்திகள்

பொன்மனை சந்திப்பில் ரூ.3.40 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை - விஜய்வசந்த் எம்.பி. திறந்து வைத்தார்

Published On 2023-09-11 13:00 IST   |   Update On 2023-09-11 13:00:00 IST
  • பொன்மனை சந்திப்பில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன
  • பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

திருவட்டார் :

பொன்மனை பேரூராட்சிக்குட்பட்ட பொன்மனை சந்திப்பில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் பேரூராட்சி தலைவர் அகஸ்டினிடம் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று விஜய்வசந்த் எம்.பி. தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.3.40 லட்சம் மதிப்பீட்டில் பொன்மனை சந்திப்பில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் முடிந்து நேற்று பயணிகள் நிழற்குடையை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பேரூராட்சி தலைவர் அகஸ்டின் தலைமை தாங்கினார். நகர தலைவர் ஜான் போஸ்கே, வினுகுமார், மார்டின், அஜிகுமார், ஜெகன், ஜெயசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஜய்வசந்த் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார்.

அகில இந்திய காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார், குலசேகரம் பேரூராட்சி தலைவர் ஜெயந்தி ஜேம்ஸ், மாவட்ட பொதுச்செயலாளர் ஜான் இக்னோசியஷ், முன்னாள் வட்டார தலைவர் காஸ்டன் கிளிட்டஸ், மாவட்ட செயலாளர் கோபகுமார், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News