உள்ளூர் செய்திகள்

ஓணம் கொண்டாட்டமாக போக்குவரத்துக்கு இடையூறு செய்த வாகனங்கள் பறிமுதல்

Published On 2023-08-28 07:43 GMT   |   Update On 2023-08-28 07:43 GMT
  • மாணவர்கள் போக்குவரத்திற்கு இடையூறாக இருசக்கர வாகனங்களில் பயணம்
  • அபராதம் விதிக்கப்பட்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

நாகர்கோவில் :

நாகர்கோவில் பீச்ரோடு-செட்டிகுளம் சாலையில் உள்ள ஒரு கல்லூரயில் ஓணம் பண்டிகை கொண்டாடத்தின்போது கல்லூரி மாணவர்கள் போக்குவரத்திற்கு இடையூறாக இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நாகர்கோவில் போக்குவரத்து காவல்துறையினர் அங்கு சென்று சோதனை செய்த போது ஆபத்தாக வாகனம் ஓட்டியது, ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டியது, பதிவு எண் இன்றி வாகனம் ஓட்டியது, போக்குவரத்திற்கு இடையூறு செய்தது ஆகிய விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News