உள்ளூர் செய்திகள்
தக்கலை அருகே டெம்போ மோதி மூதாட்டி பலி
- கண் இமைக்கும் நேரத்தில் டெம்போ, பெண் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
- தூக்கி வீசப்பட்ட பெண்ணை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.
கன்னியாகுமரி:
தக்கலை அருகே வெள்ளிகோடு பகுதியை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மனைவி மேரி ஏஞ்சல் (வயது 62).
இவர் நேற்று மாலை வெள்ளி கோட்டில் உள்ள ஒரு கடையில் பொருள்கள் வாங்க சென்றார். அப்போது மார்த்தாண்டத்தில் இருந்து நாகர்கோவிலை நோக்கி ஒரு டெம்போ வேகமாக வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் டெம்போ, பெண் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் தூக்கி வீசப்பட்ட பெண்ணை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.
இது குறித்து அவரது மகன் லீபன்ஸ் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து நிற்காமல் சென்ற டெம்போ டிரைவரை தேடி வருகின்றனர்.