உள்ளூர் செய்திகள்

கொட்டாரம் பேரூராட்சி பகுதியில் ரூ.8 கோடி செலவில் புதிய குடிநீர் திட்டப்பணிகள்

Published On 2023-08-22 07:01 GMT   |   Update On 2023-08-22 07:01 GMT
  • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
  • சி.எஸ்.ஐ. சர்ச் சாலை தார்சாலை அமைத்தல் ஆகிய பணிகளின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

கன்னியாகுமரி :

கொட்டாரம் பேரூராட்சி பகுதியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.8 கோடியே 10 லட்சம் செல வில் புதிய குடிநீர் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்ட பணியின் தொடக்க விழா கொட்டாரம் மிஷியன் காம்பவுண்ட் பகுதியில் இன்று காலை நடந்தது.

கொட்டாரம் பேரூராட்சி தலைவி செல்வகனி தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, பேரூராட்சி செயல் அலுவலர் ராஜநம்பி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்துகொண்டு புதிய குடிநீர் திட்டப்பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இதில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் தாமரைபாரதி, கொட்டாரம் பேரூராட்சி முன்னாள் வார்டு கவுன்சிலரும், பேரூர் தி.மு.க. செயலாளருமான வைகுண்டபெருமாள், கொட்டாரம் பேரூராட்சி துணை தலைவி விமலா, பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் வசந்தகுமாரி, இந்திரா, பேரூராட்சி பொறியாளர் கமால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தென்தாமரைகுளம் பேரூராட்சியில் நகர்புற சாவைகள் மேம்பாட்டுத் திட்டம் 2023 - 24 கீழ் ரூ.79.95 லட்சம் மதிப்பில் தென்தாமரைகுளம் முஸ்லீம் பள்ளிவாசல் முதல் விஜயநகரி ஜங்சன் வரை தார் சாலை அமைத்தல், மேலசந்தையடி

சி.எஸ்.ஐ. சர்ச் சாலை தார்சாலை அமைத்தல் ஆகிய பணிகளின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

அமைச்சர் மனோ தங்க ராஜ் பணியை தொடங்கி வைத்தார். குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலா ளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் பாபு, வர்த்தகர் அணி இணை செயலாளர் தாமரை பாரதி, தென் தாமரை குளம் பேரூராட்சி தலைவர் கார்த்திகாபிரதாப்,

பேரூராட்சி உறுப்பி னர்கள் சவுந்தர்ரா ஜன், பூவியூர் காமராஜ். எட்வின் ராஜ், ஆல்வின், கான்ஸ்டன் டைன் பேரூராட்சி செயல் அலுவலர் சந்தோஷ் மற்றும் பொறியாளர், உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க. நிர்வா கிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News