சுசீந்திரம் அருகே காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை தற்கொலை
- உடல் நலம் சரியில்லை என்று கூறி சிறிதுநேரம் தூங்கிவிட்டு வருவதாக படுக்கை அறைக்கு சென்றார்.
- சிவப்பிரியா கதவு வழியாக பார்த்தபோது சிவபாலன் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்
கன்னியாகுமரி :
சுசீந்திரம் அருகே புத்தளம் ஒசரவிளையை சேர்ந்தவர் சிவபாலன் (வயது 24), கொத்தனார். தெற்கு புளியன்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சிவப்பிரியா (20) இருவரும் காதலித்து வந்தனர்.
கடந்த 9 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்பொழுது பறக்கை சி.டி.எம்.புரத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். சம்பவத்தன்று சிவபாலன் வழக்கம்போல் காலை வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்தார். மனைவியிடம் தனக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறி சிறிதுநேரம் தூங்கிவிட்டு வருவதாக படுக்கை அறைக்கு சென்றார்.
நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து சிவப்பிரியா கதவு வழியாக பார்த்தபோது சிவபாலன் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் தொங்கிய சிவபாலனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிவபாலன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 9 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.