உள்ளூர் செய்திகள்

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் லட்ச தீபம்

Published On 2022-07-07 07:59 GMT   |   Update On 2022-07-07 07:59 GMT
  • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
  • இரவு 7 மணிக்கு கேந்திர சங்கீத நாடக அகாடமி தேசிய விருது பெற்ற கலைமாமணி ஸ்ரீமதி கோபிகாவர்மா மோகினியாட்டம் நடைபெறுகிறது.

கன்னியாகுமரி :

குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவட்டார் ஆதிகேசவன் பெருமாள் கோவில் 418 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மஹா கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றது. தமிழகம், கேரளா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் லட்சகணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் ‍ செய்தார்கள்.

நேற்று மாலை 6-மணி அளவில் கோவிலை சுற்றி லட்சதீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று காலை 5 மணிக்கு கணபதிஹோமம், கொடிமரம் பிரதிஷ்டை, முள பூஜை, சதுர்த்த கலசத்திற்கு பத்மமிடல் அதை தொடர்ந்து அபிஷேகம் மாலை 5 மணிக்கு ஹோமகுண்ட சுத்தி, வாஹன பரிக்கிரகம், ஜலாதிவாசம் மாலை 6.30 மணிக்கு தீபாராதனை இரவு 7 மணிக்கு திருவனந்தபுரம் கவடியார் கொட்டாரம் கேந்திர சங்கீத நாடக அகாடமி தேசிய விருது பெற்ற கலைமாமணி ஸ்ரீமதி கோபிகாவர்மா மோகினியாட்டம் நடைபெறுகிறது.

Tags:    

Similar News