உள்ளூர் செய்திகள்

உடைக்கப்பட்ட உண்டியல்.

இரணியலில் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை

Published On 2022-11-10 12:48 IST   |   Update On 2022-11-10 12:48:00 IST
  • இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
  • குருந்தன்கோடு ஊற்று விளையில் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது

கன்னியாகுமரி:

இரணியல் அருகே உள்ள குருந்தன்கோடு ஊற்று விளையில் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் பூஜை வழிபாடுகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கோயிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து ரூ.1000 பணத்தை திருடிச் சென்று உள்ளனர்.

இது குறித்து கோவில் நிர்வாகி ராமசாமி (வயது 62) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News