உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் வீர, தீர செயல் புரிந்தவர்கள் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் அரவிந்த் தகவல்

Published On 2022-06-16 07:33 GMT   |   Update On 2022-06-16 07:33 GMT
  • வீர, தீர செயல் புரிந்தவர்கள் கல்பனா சாவ்லா விருது
  • சமுதாயத்தில் துணிச்சலான தைரியமிக்கசாதனை புரிந்த பெண்கள் இந்த விருதினை பெற விண்ணப்பிக்கலாம்

நாகர்கோவில் :

குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கல்பனா சாவ்லா விருது ஆண்டுதோறும் சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளிலும் மிகப்பெரிய சாதனை புரியும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 2022-ம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சமுதாயத்தில் துணிச்சலான தைரியமிக்கசாதனை புரிந்த பெண்கள் இந்த விருதினை பெற விண்ணப்பிக்கலாம்.

இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் உரிய சாதனை சான்று களுடன் விண்ண ப்பங்களை வருகிற 25-ந் தேதி மாலை 5 மணிக்குள் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News