உள்ளூர் செய்திகள்

மார்த்தாண்டம் மார்க்கெட்டில் மலைபோல் குவிந்திருந்த குப்பைகள் அகற்றம்

Published On 2023-07-18 07:08 GMT   |   Update On 2023-07-18 07:08 GMT
  • குப்பைகளை அகற்ற வேண்டும் என்று நகராட்சி கவுன்சிலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

கன்னியாகுமரி :

குழித்துறை நகராட்சிக்குட்பட்ட குப்பைகள் மார்த்தாண்டம் மார்க்கெட்டில் நீண்ட நாட்களாக குவிக்கப்பட்டு வந்தன.

இதனால் மலைபோல் குவிந்து காணப்பட்ட குப்பைகளிலிருந்து துர்நாற்றம் வீசியது. இந்த குப்பைகளை அகற்ற வேண்டும் என்று நகராட்சி கவுன்சிலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதனை தொடர்ந்து குழித்துறை நகராட்சி சேர்மன் பொன்.ஆசைத்தம்பி, ஆணையாளர் ராமதிலகம் முயற்சியால் தற்போது குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது.

இந்த குப்பைகள் வெளி மாவட்டங்களுக்கு வாக னங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக ரூ.4 லட்சம் வழங்கப் பட்டுள்ளது. குழித்துறை நகராட்சி சார்பில் தற்போது மக்கும் குப்பை. மக்காத குப்பை என பிரித்து எடுக்கப்படு கிறது. இதனால் மார்க்கெட் பகுதியில் உள்ள நீண்ட நாள் பிரச்சினை முடிவுக்கு வந்தது.

Tags:    

Similar News