உள்ளூர் செய்திகள்

குலசேகரத்தில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு

Published On 2022-06-21 07:06 GMT   |   Update On 2022-06-21 07:06 GMT
  • 3 ½ பவுன் தங்க செயினை பறித்து கொன்டு மின்னல் வேகத்தில் ஓட்டம்
  • சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு

கன்னியாகுமரி :

குலசேகரம் அருகே உண்ணீர்கோணம் பகுதியை சேர்ந்தவர் ஜானகி அம்மாள். இவர் திருமணமான மகளுடன் வசித்து வருகிறார். நேற்று மதியம் ஜானகி அம்மாள் மட்டும் வீட்டில் சமையல் அறையில் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது பின் பக்கம் வாசல் வழியாக ஒரு வாலிபர் வீட்டுக்குள் புகுந்துள்ளார்.

அவர், ஜானகி அம்மாளின் கழுத்தில் இருந்த 3 ½ பவுன் தங்க செயினை பறித்து கொன்டு மின்னல் வேகத்தில் ஓடிவிட்டார். ஜானகி அம்மாள் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் நகை பறித்த வாலிபர் தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். தொடர் திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டு உள்ளது.

Tags:    

Similar News