உள்ளூர் செய்திகள்
மணவாளக்குறிச்சி அருகே எம்சாண்ட் மணல் கடத்திய டெம்போ பறிமுதல் - டிரைவர் தப்பி ஓட்டம்
- மணவாளக்குறிச்சி அருகே பிள்ளையார்கோவில் சந்திப்பில் செல்லும்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு டெம்போவை நிறுத்தினர்.
- போலீசார் டெம்போ ஓட்டுனர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.
கன்னியாகுமரி :
புவியியல் சுரங்கத் துறை தனி வருவாய் ஆய்வாளர் ஸ்ரீகுமார், குளச்சல் கிராம நிர்வாக வருவாய் ஆய்வாளர் முத்துப்பாண்டி ஆகியோர் நேற்று முன்தினம் கனிம பொருட்கள் கடத்தலை தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மணவாளக்குறிச்சி அருகே பிள்ளையார்கோவில் சந்திப்பில் செல்லும்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு டெம்போவை நிறுத்தினர். அப்போது டிரைவர் டெம்போவை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். அதி காரிகள் டெம்போவை சோதனை செய்தபோது அனுமதியின்றி ஒரு டன் எம்சாண்ட் மணல் இருந்தது தெரியவந்தது. உடனே அதிகாரிகள் எம்சாண்ட் மணலுடன் டெம்போவை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து டெம்போவை மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையம் கொண்டு செல்ல ப்பட்டது. போலீசார் டெம்போ ஓட்டுனர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.