உள்ளூர் செய்திகள்

கோட்டாரில் எலக்ட்ரீசியனுக்கு கத்தி குத்து

Published On 2023-07-23 08:48 GMT   |   Update On 2023-07-23 08:48 GMT
  • ரவுடி மீது கொலை முயற்சி வழக்கு
  • மதன்ராஜ் பெயர் ஏற்கனவே ரவுடிகள் பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

நாகர்கோவில் :

நாகர்கோவில் கோட்டார் மீனாட்சி செட்டி தெருவை சேர்ந்தவர் மதன்ராஜ் (வயது 29). இவர் பறக்கை சந்திப்பில் உள்ள டீக்கடை யில் டீ குடித்துவிட்டு அங்குள்ள கியூ.ஆர். கோடு மூலம் பணம் செலுத்தினார். அப்போது கோட்டார் பகுதியை சேர்ந்த பரிமளக்கண்ணன் என்பவருக்கும், மதன்ராஜிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் பரி மளக்கண்ணன் அவரது நண்பர்கள் பிரவீன், ஆகாஷ் ஆகியோருடன் சேர்ந்து மதன்ராஜ் வீட்டிற்கு சென்று வீட்டின் ஜன்னல் கண்ணாடியை அடித்து உடைத்தனர்.

மேலும் மதன்ராஜை கம்பியால் தாக்கினார்கள். இதுகுறித்து மதன்ராஜ் கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் பரிமளக்கண்ணன், பிரவீன், ஆகாஷ் மீது கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோட்டார் வாகையடி தெற்கு தெருவை சேர்ந்த ஆகாஷ் (22). இவர் கோட்டார் போலீசில் புகார் அளித்தார். அதில் கூறி யிருப்பதாவது:-

நான் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறேன். என்னுடைய நண்பர்கள் பிரவீன், பரிமளக்கண்ணனுடன் பறக்கை சந்திப்பில் டீ குடித்துக் கொண்டிருந்த போது அங்கு நின்று கொண்டிருந்த மதன்ராஜ் என்பவர் என்னிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர் ஆறுமுகம் பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மதன்ராஜ் என்னை அவதூறாக பேசியதுடன் கத்தியால் குத்தினார்.

இதில் எனது கண் மற்றும் முதுகில் ரத்த காயம் ஏற்பட்டது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியி ருந்தார். இதன் பேரில் போலீசார் மதன்ராஜ் மீது கொலை முயற்சி உட்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதன்ராஜ் பெயர் ஏற்கனவே ரவுடிகள் பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags:    

Similar News