உள்ளூர் செய்திகள்

குலசேகரம் அருகே ஆசிட் குடித்து மூதாட்டி தற்கொலை

Published On 2023-11-27 06:33 GMT   |   Update On 2023-11-27 06:33 GMT
  • கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார்.
  • குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்

திருவட்டார் :

குலசேகரம் அருகே உள்ள குளச்சவிளாகம் பொன்மனை பகுதியை சேர்ந்தவர் ராதாகுமாரி (வயது 77). கணவர் இறந்துவிட்ட நிலையில் மகள் அஜிதாகுமாரி பரா மரிப்பில் வாழ்ந்து வந்தார்.

இவர்களுடன் ராதா குமாரியின் தங்கை மகன் பிரபாத் குமார் (48) என்பவரும் வசித்து வந்தார். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இந்த சம்பவம் ராதாகுமாரியை மிகவும் பாதித்தது.

இதுபற்றி உறவினர்க ளிடம் அடிக்கடி கூறி வேதனைப்பட்டு வந்துள் ளார். இந்த நிலையில் சம்ப வத்தன்று வீட்டில் இருந்த ரப்பர் பால் ஊற வைக்கும் ஆசிட்டை குடித்துவிட்டு ராதாகுமாரி மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு அஜிதா குமாரி குல சேகரம் அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக நாகர் கோவில் ஆசாரிப் பள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்துவிட்டு, ராதாகுமாரி இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக அஜிதாகுமாரி கொடுத்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து ராதா குமாரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News