உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரியில் ரூ.3 கோடி செலவில் குடிநீர், சாலை திட்ட பணிகள்பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்

Published On 2023-09-10 10:23 GMT   |   Update On 2023-09-10 10:23 GMT
  • கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடந்தது
  • ரூ.3 கோடி செலவில் குடிநீர் மற்றும் சாலை திட்டப் பணிகளை நிறைவேற்றுதல்

நாகர்கோவில் :கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடந்தது. பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன், துணை தலைவி ஜெனஸ் மைக்கேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள் லிங்கேஸ் வரி, மகேஷ், சுஜா, இந்திரா,ராயப்பன், சிவசுடலைமணி, இக்பால், வினிற்றா, சகா யசர்ஜினாள், சகாயஜூடு அல்பினோ, பூலோக ராஜா, அட்லின், ஆனிரோஸ் தாமஸ், டெல்பின், பேரூ ராட்சி சுகாதார அதிகாரி முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கன்னியா குமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளிலும் பேரூராட்சி பொது நிதியில் இருந்தும், தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்தும் ரூ.3 கோடி செலவில் குடிநீர் மற்றும் சாலை திட்டப் பணிகளை நிறைவேற்றுதல்.

தெருக்களில் உள்ள மின்விளக்குகளை பரா மரித்தல், அலங்கார தரைத்தளம் அமைத்தல், கழிவுநீர் ஓடை சீரமைத்தல் உள்ளிட்ட பல வளர்ச்சி திட்ட பணிகளை நிறை வேற்று வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் பல்வேறு வரவு-செலவு கணக்குகள் வாசித்து அங்கீகரிக்கப்பட்டன.

Tags:    

Similar News