உள்ளூர் செய்திகள்

மக்கள் பயன்பாட்டிற்கு சாலையை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தபோது எடுத்த படம்.

மெதுகும்மல் ஊராட்சியில் ரூ.18 லட்சம் செலவில் மேம்பாட்டு பணிகள்

Published On 2023-03-15 13:23 IST   |   Update On 2023-03-15 13:23:00 IST
  • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
  • பல வருடங்களாக சீரமைக்காமல் பழுதடைந்து காணப்பட்டது.

கன்னியாகுமரி:

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மெதுகும்மல் ஊராட்சியில் பல வருடங்களாக சீரமைக்காமல் பழுதடைந்து காணப்பட்ட செம்மான் விளை செல்லும் சாலை, சுந்தரவனம் - திட்டங்கினாவிளை சாலையில் மழை நீர் ஓடை, நெய்யாறு இடதுக்கரை கிளை சானல் கரையில் குரங்குமான் விளை பகுதியில் கன மழையால் இடிந்து விழுந்த பக்கசுவர், கம்மங்கூடல் குளத்தில் பக்கசுவர் போன்ற பணிகளை செய்து தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. செம்மான்விளை செல்லும் சாலையை காங்கிரீட் சாலையாக அமைக்க ரூ.3 லட்சமும், சுந்தரவனம்- திட்டங்கினாவிளை சாலை யில் மழை நீர் ஓடை அமைக்க ரூ.5 லட்சமும், நெய்யாறு இடதுக்கரை கிளை சானல் கரையில் குரங்குமான் விளை பகுதியில் கன மழையால் இடிந்து விழுந்த பக்கசுவர் அமைக்க ரூ.5 லட்சமும், கம்மங்கூடல் பகுதியில் உள்ள குளத்தில் பக்கசுவர் அமைக்க ரூ.5 லட்சமும் என 4 பணிகளுக்கும் மொத்தம் ரூ.18 லட்சம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்தார். பின்னர் இந்த பணிகள் முடிவடைந்ததையடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் முஞ்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயகுமார், மாநில பொதுச்செயலாளர் பால்ராஜ், மெதுகும்மல் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வராஜ், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் லூயிஸ், முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ராஜேஷ்வரி, ஊராட்சி மன்ற உறுப்பினர் செல்லன், மற்றும் ஷாஜி, டிஜூ காங்கிரஸ் நிர்வாகிகள் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News