உள்ளூர் செய்திகள்

திருவட்டார் அருகே இரு தரப்பினர் மோதல்

Published On 2022-10-05 11:41 GMT   |   Update On 2022-10-05 11:41 GMT
  • பெண் கைது
  • 4 பேர் மீது வழக்கு

கன்னியாகுமரி:

திருவட்டார் அருகே உள்ள கல்லங்குழி பகுதியில் வசித்து வருபவர் ஜெயகடாட்சன் (வயது 50). அந்த பகுதியில் தொழில் செய்து வருகிறார் இவருடைய பக்கத்து வீட்டை சேர்ந்தவர் அருள்ராஜ் (45). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்து கூலி வேலை செய்து வருகிறார்.

பெருஞ்சகோணம் பகுதியை சேர்ந்தவர் பேலிஸ் (54). இவருடைய மனைவி வசந்தா, மகன் அனிஷ், உறவினர் செல்லத்துரை ஆகியோருக்கும் ஜெயகடாட்சனுக்கும் பாதை தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று ஜெயகடாட்சன் அந்த பகுதியில் வரும்போது பேலிஸ் அவரை வழிமறித்து தகராறு செய்தார் இதில் இரு தரப்பினரும் மோதி கொண்டனர். இவருக்கு ஆதரவாக அருள்ராஜ் சென்று சமதானம் செய்ய சென்றார்.

இதில் பேலிஸ் மனைவி மகன் உறவினர் சேர்ந்து தாக்கியதில் அருள்ராஜ் பலத்த காயம் ஏற்பட்டு ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்தியில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயகடாட்சன் தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து பேலிசின் மனைவி வசந்தாவை கைது செய்தனர் பேலிஸ் மகன் அனிஷ், உறவினர் செல்லத்துரை தலைமறைவாக உள்ளனர். இவர்களை பிடிக்க போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News