உள்ளூர் செய்திகள்
தெரிசனம்கோப்பு கவுசிகா பள்ளியில் குழந்தைகள் தின விழா
- விழாவில் நேருவின் உடையணிந்து வந்த மாணவிகளை உற்சாகப்படுத்தி கவுரவப்படு த்தினர்
- பள்ளி தாளாளர் செண்பகநாதன் தலைமை தாங்கினார்.
நாகர்கோவில் :
தெரிசனம்கோப்பு கவுசிகா பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் சென்ட்ரல் ரோட்டரி கிளப் தலைவர் குஞ்சுகிருஷ்ணன், கிரீன்லேண்டு பூதப்பாண்டி ரோட்டரி கிளப்பின் தலைவர் ஜாண்சன், செயலாளர் செல்வதாஸ், நாதன், பரமேஸ்வரன், அய்யப்பன், சிக்கந்தர் பாட்சா ஆகியோர் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினர். விழாவில் நேருவின் உடையணிந்து வந்த மாணவிகளை உற்சாகப்படுத்தி கவுரவப்படு த்தினர். பள்ளி தாளாளர் செண்பகநாதன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் உமாநாதன், மதிமாதவன், விஜி கிருஷ்ணவேணி, வீரலட்சுமி உள்ளிட்ட ஆசிரியர்கள் செய்திருந்தனர்.