உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை

Published On 2022-06-13 07:46 GMT   |   Update On 2022-06-13 07:46 GMT
  • திருவள்ளுவர் சிலையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை
  • படகு மூலம் இரும்பு பைப்புகள் கொண்டு செல்லப்படுகிறது

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை எழுப்பப்பட்டு உள்ளது.

இந்த சிலை கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த திருவள்ளுவர் சிலையை தினமும் ஆயிரக்க ணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்று லா பயணிகள் படகில் சென்று கண்டுகளித்து வரு கின்றனர்.

இநத் சிலை கடல் உப்புக்காற்றினால் பாதிப்ப டையாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம். கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடைசியாக ரசாயனகலவை பூசப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் ரசாயன கலவை பூசஅரசுநடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக பணி நடை பெறவில்லை. இந்த ஆண்டு ரூ.1 கோடி செலவில் ரசாயனக் கலவை பூசும் பணி நடைபெறஉள்ளது. இந்தப்பணி நடைபெற உள்ளதை தொடர்ந்து கடந்த 6-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 2-ந்தேதி வரை 5 மாதங்களுக்கு திருவள்ளுவர் சிலையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்து உள்ளது.

இந்த நிலையில் இந்த பணியை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடந்த 6 -ந்தேதி தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக இந்த சிலையை சுற்றிலும் இரும்பு குழாய்கள் மூலம் சாரம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

இதற்காக சென்னை மற்றும் தூத்துக்குடியில் இருந்து 80 டன் இரும்பு குழாய்கள் கன்னியாகுமரி வந்துஉள்ளது. இவை படகுகள் மூலம் சிலை அமைந்து உள்ள பாறைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் திருவள்ளுவர் சிலையயைசுற்றி ரசாயன கலவை பூசுவதற்காக இரும்பு பைப்புகளால் சாரம் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.

தற்போது முதல் கட்டமாக திருவள்ளுவர் சிலையின் பீடத்தைச் சுற்றி இரும்பு பைப்புகளால் சாரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News