உள்ளூர் செய்திகள்

கேரளாவிற்கு பெஸ்ட் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா

Published On 2023-09-28 07:42 GMT   |   Update On 2023-09-28 07:42 GMT
  • 6 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணாக்கர்கள் கல்வி சுற்றுலா கேரளா சென்றனர்
  • சர்வதேச அளவிலும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சியில் மிக முக்கிய இடத்தை பெற்றுள்ளது

மார்த்தாண்டம் :

கருங்கல் பாலூரில் இயங்கி வரும் பெஸ்ட் சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளி யில் இருந்து 6 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணாக்கர்கள் கல்வி சுற்றுலா கேரளா சென்றனர். பள்ளி தலைவர் டாக்டர் தங்கசுவாமி மாணாக்கர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

மேலும் முதுநிலை முதல்வர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மாணக்கர்கள் உடன் சென்றனர். திருவ னந்தபுரம் சி.எஸ்.ஐ.ஆர். அறிவியல் ஆராய்ச்சி மையம், சுற்றுலாத்தலங்க ளான விழிஞ்ஞம் கலங்கரை விளக்கு, பூவாறு கடற்கரை தீவு போன்ற இடங்களுக்கு கல்வி சுற்றுலா சென்றனர்.

முன்னதாக சுற்றுலா செல்லும் தலங்கள் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் ஆசிரியரின் விளக்கவுரை யுடன் கூடிய காணொலி காட்சியும் காண்பிக்கப் பட்டது. திருவனந்தபுரம், பலவகையான ஆய்வகங் களை கொண்ட சி.எஸ்.ஐ. ஆர். அறிவியல் ஆராய்ச்சி மையமானது, தேசிய அள விலும், சர்வதேச அளவிலும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சியில் மிக முக்கிய இடத்தை பெற்றுள்ளது. அதனை குறித்து மாணாக்கர்கள் தெரிந்து கொள்ளும் விதமாகவும் அமைந்திருந்தது.

இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்துடன் இணைந்து ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News