உள்ளூர் செய்திகள்

குமாரபுரம் அரசு ஆரம்ப பள்ளியில் ரூ.12 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறை கட்டிடம்

Published On 2023-10-31 06:44 GMT   |   Update On 2023-10-31 06:44 GMT
  • விஜய்வசந்த் எம்.பி. அடிக்கல் நாட்டினார்
  • காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் புதிதாக வகுப்பறைகள் கட்டி தரும்படி கோரிக்கை வைத்தனர்.

நாகர்கோவில் :

குமாரபுரம் அரசு ஆரம்ப பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகமாக இருப்ப தால் போதுமான வகுப்ப றைகள் இல்லாத நிலை உள்ளது. இது தொடர்பாக பள்ளி மேலாண்மை குழுவினர், ஊர் பொது மக்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் புதிதாக வகுப்பறைகள் கட்டி தரும்படி விஜய்வசந்த் எம்.பி.யிடம் கோரிக்கை வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து பள்ளியை ஆய்வு செய்த அவர், கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.

தொடர்ந்து வட்டார தலைவர் பிரேம் குமார் தலைமையில் கால்டு வின் முன்னிலையில் விஜய் வசந்த் எம்.பி. புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு பூமி செய்து அடிக்கல் நாட்டி னார்.

நிகழ்ச்சியில் திருவட்டார் வட்டார தலைவர் ஜெபா, குமாரபுரம் பேரூராட்சி தலைவர் ஜாண் கிறிஸ்டோ பர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News