உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கும் பணி

Published On 2022-07-30 06:50 GMT   |   Update On 2022-07-30 06:50 GMT
  • நாளை மறுநாள் தொடங்குகிறது
  • குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்

நாகர்கோவில்:

குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு தலின்படி வாக்காளர் பட்டி யலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் தனித்தக வல்களை உறுதிப்படுத்திட வும், ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதி யில் இருவேறு இடங்களில் இடம் பெறுதல் அல்லது இருவேறு தொகுதிகளில் இடம் பெறுதல் ஆகியவற்றை தவிர்க்கும் பொருட்டும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் தொடங்க உத்தர விடப்பட் டுள்ளது.

அதன்படி, குமரி மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் அடங்கி உள்ள வாக்காளர்கள் தாமாக முன்வந்து https://www.nvsp.in என்ற இணையதளத்திலோ அல்லது வோட்டர் ஹெல்ப் லைன் என்ற செயலி மூல மாகவோ அல்லது வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் கொண்டு வரும் படிவம் 6-பியை பூர்த்தி செய்து கொடுத்தோ, தங்கள் பகுதிக் குட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள், வாக்காளர் உதவி மையம் மற்றும் இ-சேவை மையத்தினை அணுகியோ தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டி யலுடன் இணைத்து பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News