உள்ளூர் செய்திகள்

தக்கலை அருகே வைக்கோல் பாரம் ஏற்றி சென்ற டெம்போ தீப்பிடித்து எரிந்தது

Published On 2022-10-05 11:21 GMT   |   Update On 2022-10-05 11:21 GMT
  • தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

கன்னியாகுமரி:

தக்கலை அருகே மேல பள்ளம் வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன்ராஜ் (வயது 42). வைக்கோல் வியாபாரி.

இவர் நேற்று முன்தினம் தனக்கு சொந்தமான டெம்போவில் வைக்கோல் பாரம் ஏற்றினார். பின்னர் அந்த டெம்போவை புலியூர் குறிச்சி அருகே சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றிருந்தார்.அதிகாலையில் அவரது டெம்போவில் இருந்த வைக்கோல் தீப்பிடித்து எரிந்தது.

இதை பார்த்த பொது மக்கள் ஜெகன் ராஜுக்கு தகவல் தெரிவித்தனர்.தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வைக்கோல் போரில் எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் தீ விபத்தில் டெம்போ எரிந்து நாசமானது.

இது குறித்து ஜெகன் ராஜ் தக்கலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வைக்கோல் பாரத்திற்கு யாராவது தீ வைத்தார்களா அல்லது மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததா? என்பது குறித்து விசாரணை நடத் தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News