உள்ளூர் செய்திகள்
கோப்பு படம் 

குலசேகரம் அருகே தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை

Published On 2022-11-12 08:13 GMT   |   Update On 2022-11-12 08:13 GMT
  • மோட்டார் சைக்கிள் வாங்கித் தராததால் விபரீத முடிவு
  • வீடு கட்டிய கடன் இருப்பதால் சில மாதங்கள் கழித்து வாங்கி தருவதாக தந்தை கூறியதால் மனமுடைந்தார்.

கன்னியாகுமரி:

குலசேகரம் அருகே உள்ள கொல்லாறை கைதக்கல் காலணியை சேர்ந்த வர் செல்வன். இவரது இளைய மகன் சஜின் (வயது 20). இவர் பிளஸ்-2 படித்துவிட்டு வெல்டிங் தொழில் செய்து வந்தார்.

இவர் தனது தந்தையிடம் புதியதாக ரூ.2 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் வாங்கி தர கேட்டு உள்ளார். வீடு கட்டிய கடன் இருப்பதால் சில மாதங்கள் கழித்து வாங்கி தருவதாக தந்தை செல்வன் கூறி உள்ளார். இதனால் சஜின் மனமுடைந்தார்.

நேற்று செல்வம் தனது மனைவி மற்றும் மூத்தமகனுடன் புதிய வீட்டில் தங்கி உள்ளார்.சஜின் பழைய வீட்டில் தூங்க சென்றார்.

இன்று காலையில் செல்வன், அவருக்கு காப்பி கொடுப்பதற்கு சென்றார். அப்போது கதவு பூட்டப்பட்டு கிடந்தது. கதவை தட்டிய போதும் சஜின் திறக்கவில்லை.

இதனை தொடர்ந்து ஜன்னல் வழியாக பார்த்த போது படுக்கை அறையில் வீட்டின் உத்திரத்தில் தூக்குபோட்டு சஜின் தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து குலசேகரம் போலீசாருக்கு செல்வன் தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து சஜின் உடலைக் கைப்பற்றி குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News