உள்ளூர் செய்திகள்

புலியை பிடிக்க நெல்லையிலிருந்து மேலும் 5 பேர் கொண்ட விரைவு படை வருகை

Published On 2023-07-26 06:23 GMT   |   Update On 2023-07-26 06:23 GMT
  • சத்தியமங்கலத்தில் இருந்து நவீன கேமிரா கொண்டுவர ஏற்பாடு
  • பேச்சிப்பாறை பகுதியில் இன்று டிரோன் மூலம் கண்காணிப்பு

நாகர்கோவில் :

பேச்சிப்பாறை அருகே சிற்றார் ரப்பர் கழக தொழி லாளர் குடியிருப்பு மற்றும் பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு புலி அட்டகாசம் செய்தது. தொழிலாளர்களுக்கு சொந்த மான ஆடு, மாடுகளை வேட் டையாடியதால் பொதுமக்கள் அச்சமடை ந்தனர்.

இதையடுத்து புலியை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். 50-க்கும் மேற்பட்ட நவீன கேமராக்கள் அமைக்கப்பட்டும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 2 இடங்களில் கூண்டுகள் அமைத்து புலியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

ஆனால் புலி சிக்கவில்லை. இருப்பினும் புலி அட்டகாசம் செய்து வந்ததை தொடர்ந்து பொதுமக்கள் அச்சமடைந்தனர் இந்த நிலையில் புலியை பிடிக்க களக்காட்டில் இருந்து மருத்துவ குழுவினரும் தேனி மாவட்டம் வைகை ஆறு பகுதியில் இருந்து எலைட் படையினரும் வருகை தந்தனர். அவர்கள் அந்த பகுதியில் உள்ள காட்டுப் பகுதிகளில் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் புலியை பிடிக்க நெல்லையிலிருந்து 5 பேர் கொண்ட விரைவுப்படை இன்று வருகை தரவுள்ளது. மேலும் குல சேகரம், அழகிய பாண்டியபுரம் பகுதியைச் சேர்ந்த வன ஊழியர்கள் 5 பேரும் இவர்களுடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட உள்ளனர். டிரோன்கேமரா மூலமாக இன்று காலையில் பேச்சிபாறை முழுவதும் மூலம் கண் காணிக்கும் பணிநடந்தது.

கடந்த 5 நாட்களாகவே புலி நகர்வுகள் இல்லாமல் உள்ளது. எனவே புலி அடர்ந்த காட்டுக்குள் உள்ள விலங்குகளை வேட்டை யாடி வாழ்ந்து வரலாம் என்று தெரிகிறது. இது குறித்து வனத்துறை அதிகாரி இளையராஜா கூறுகையில், புலியின் கால் தடத்தை வைத்து பார்க்கும் போது, வயதான புலி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் புலியை பிடிக்க எலைட் படையினரும் வனத்துறையி னரும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

ஆனால் புலி சிக்கவில்லை. கடந்த 5 நாட்களாக எந்த ஒரு நகர்வும் இன்றி புலி உள்ளது. புலியை பிடிக்க நெல்லையிலிருந்து விரைவு படையும் வருகை தர உள்ளனர். மேலும் டிரோன் கேமரா மூலமாக கண் காணித்து வருகிறோம். சத்தியமங்கலத்தில் இருந்து நவீன கேமரா கொண்டு வந்து கண்காணிக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம். இதற்காக வனத்துறையினர் அங்கு சென்று அந்த கேம ராவை வாங்கி உள்ளனர்.

இன்று மாலை நவீன கேமரா பேச்சிப்பாறை வனப் பகுதிக்கு கொண்டு வரப்படும். இந்த கேமராவின் மூலமாக இரவு நேரத்தில் விலங்கு களின் நடமாட் டத்தை கண்காணிக்கலாம். அதை வைத்து புலியை பிடிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். பொது மக்கள் அச்சப்பட தேவை யில்லை என்றார்.

Tags:    

Similar News