உள்ளூர் செய்திகள்

பளுகல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் நர்சின் தந்தை பலி

Published On 2022-10-05 10:59 GMT   |   Update On 2022-10-05 10:59 GMT
  • சாலையில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு பின் பக்க தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
  • பளுகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

கன்னியாகுமரி:

கேரள மாநிலம் தனுவச்சபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 56). இவரது மகள் ரேஷ்மா. இவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.

சுரேஷ்குமார் நேற்று இரவு தனக்கு சொந்த மான இருசக்கர வாகனத்தில் பளுகல் அருகே பண்டா ரக்கோணம் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி தனது வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார். பளுகல் அருகே மத்தம்பாலை பகுதியில் வந்த போது எதிரே அதி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது.

இதில் சுரேஷ்குமார்நிலை தடுமாறி சாலையில் தூக்கி வீசப்பட்டு பின் பக்க தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சாலையில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாறசாலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் சுரேஷ் குமார் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தார்.

இது குறித்து சுரேஷ்கு மாரின் மகள் ரோஷ்மா கொடுத்த புகாரின் அடிப்படையில் பளுகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News