உள்ளூர் செய்திகள்

கோழிப்போர்விளையில் 5.7 மில்லி மீட்டர் மழை பதிவு

Published On 2023-09-06 07:13 GMT   |   Update On 2023-09-06 07:13 GMT
  • கோழிப்போர்விளையில் அதிகபட்சமாக 5.7 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
  • பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 18.72 அடியாக உள்ளது

நாகர்கோவில்:

குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்த நிலையில் தற்பொழுது சற்று மழை குறைந்துள்ளது. நாகர்கோவில், தக்கலை, குளச்சல், இரணியல், கோழிப் போர்விளை, முள்ளங்கினாவிளை, அடையாமடை பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்தது. கோழிப்போர்விளையில் அதிகபட்சமாக 5.7 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இதையடுத்து அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது. பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 18.72 அடியாக உள்ளது. அணைக்கு 472 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 583 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. பெருஞ் சாணி அணை நீர்மட்டம் 37.95 அடியாக உள்ளது. அணைக்கு 228 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்ப டுகிறது.

Tags:    

Similar News