உள்ளூர் செய்திகள்
குமரி மாவட்டத்தில் புதிதாக 44 பேருக்கு கொரோனா
- பாதிக்கப்பட்டவர்களில் 18 பேர் ஆண்கள், 26 பேர் பெண்கள்
- சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனையை தீவிரபடுத்தி உள்ளனர்
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் நேற்று 44 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 18 பேர் ஆண்கள், 26 பேர் பெண்கள். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ராஜாக்கமங்கலம், நாகர்கோவில், முஞ்சிறை பகுதிகளில் தலா 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அகஸ்தீஸ்வரம், திருவட்டார், தக்கலையில் தலா 4 பேரும், தோவாளையில் 3 பேரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனையை தீவிரபடுத்தி உள்ளனர்.காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.