உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் பிரபல கொள்ளையர் 3 பேர் கைது

Published On 2022-09-22 07:47 GMT   |   Update On 2022-09-22 07:47 GMT
  • சுசீந்திரம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவரிடம் நகை பறிக்கப்பட்டது .
  • நிலையில் கொள்ளை வழக்கு தொடர்பாக 3 வாலிபர்களை போலீசார் பிடித்தனர். பிடிபட்ட வாலிபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

நாகர்கோவில் :

குமரி மாவட்டத்தில் சமீபகாலமாக செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது .சுசீந்திரம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவரிடம் நகை பறிக்கப்பட்டது .

இது குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் கொள்ளை வழக்கு தொடர்பாக 3 வாலிபர்களை போலீசார் பிடித்தனர். பிடிபட்ட வாலிபர்களிடம் விசாரணை நடத்தப்பட் டது. அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.

சந்தேகம் அடைந்த போலீசார் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரித்தனர்.விசாரணையில் அவர்கள் பெண்ணிடம் நகையை பறித்ததை ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்து 2 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

பிடிபட்டவர்கள் நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியை சேர்ந்த சுதன் (வயது 28) கங்கை கொண்டான் பகுதியைச் சேர்ந்த மந்திரமூர்த்தி (22) சுடர்மணி (24) என்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு வேறு வழக்கில் தொடர்பு உண்டா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News