உள்ளூர் செய்திகள்

புதுக்கடை, தேங்காப்பட்டணம் பகுதிகளில் 10-ந்தேதி மின்தடை

Published On 2023-10-07 09:33 GMT   |   Update On 2023-10-07 09:33 GMT
  • குழித்துறை கோட்டத்திற் குட்பட்ட முன்சிறை மற்றும் நடைக்காவு துணைமின் நிலையங்களில்
  • பராமரிப்பு பணிகள் வருகிற 10-ந்தேதி நடக்கிறது


நாகர்கோவில் : குழித்துறை கோட்டத்திற் குட்பட்ட முன்சிறை மற்றும் நடைக்காவு துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் வருகிற 10-ந்தேதி நடக்கிறது. எனவே அன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை முன்சிறை, காப்புக்காடு, விரிவிளை, நித்திரவிளை, இரையுமன்துறை, புதுக்கடை, ஐரேனிபுரம், தொலையாவட்டம், மாங்கரை, விழுந்தயம்பலம், வேங்கோடு, மாதாபுரம், அரசகுளம், பைங்குளம், தேங்காப்பட்டணம், ராமன் துறை, புத்தன்துறை, இனயம், கிள்ளியூர், கீழ்குளம், சென்னித் தோட்டம், சூரியகோடு, குளப்புறம், சுந்தரவனம், மங்காடு, வாறுத்தட்டு, குழிவிளை, கோழிவிளை, கோணசேரி, சாத்தன்கோடு, வாவறை, மணலி, பால விளை, வளனூர், சூழால், பாத்திமாநகர், மெதுகும்மல், வெங்கஞ்சி, பூத்துறை, தூத்தூர், கொல்லங்கோடு, கிராத்தூர் ஆகிய பகுதி களுக்கு மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை குழித்துறை மின்வாரிய செயற்பொறியாளர் தெரி வித்துள்ளார்.

Tags:    

Similar News