உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தபோது எடுத்த படம் 

நாகர்கோவிலில் இன்று சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-12-27 09:41 GMT   |   Update On 2022-12-27 09:41 GMT
  • தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நடந்தது.
  • காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை சத்துணவு ஊழியர்களை கொண்டு நடை முறைப்படுத்த வேண்டும்

நாகர்கோவில்:

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை சத்துணவு ஊழியர்களை கொண்டு நடை முறைப் படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியு றுத்தி நடந்த இந்த ஆர்ப்பா ட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெபமணி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கவிதா வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் பொன் பாக்கிய தீபா கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

நிர்வாகிகள் உதயகுமார், நாஞ்சில் நதி, ரிச்சர்ட் கென்னடி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். துணைத்தலைவர் கவிதா, துணை செயலாளர் பிரபா ராணி, செயற்குழு உறுப்பினர் லூயிஸ் மேரி உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News