உள்ளூர் செய்திகள்

எரிந்த நிலையில் கிடந்த மோட்டார் சைக்கிள்.

கருங்கல் அருகே மோட்டார் சைக்கிள் தீவைத்து எரிப்பு

Published On 2023-01-30 10:01 GMT   |   Update On 2023-01-30 10:01 GMT
  • ரோட்டோரம் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளுக்கு யாரோ மர்ம நபர்கள் தீ வைத்து எரித்து உள்ளனர்.
  • கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து எரித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி:

குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள தேவிகோடு தோரணவிளையை சேர்ந்த வர் செல்லன். இவது மகன் மகேஷ் (வயது 20).

இவர் கடந்த 28-ம் தேதி மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார்.அப்போது டயர் பஞ்சர் ஆகி உள்ளது. எனவே மோட்டார் சைக்கிளை சாலையோரம் நிறுத்தி விட்டு வேலைக்குச் சென்று உள்ளார்.

நேற்று மோட்டார் சைக்கிளை எடுத்து வர ஊழியருடன் சென்றார். அங்கு அவரது மோட்டார் சைக்கிள் எரிந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ரோட்டோரம் நிறுத்தி யிருந்த மோட்டார் சைக்கி ளுக்கு யாரோ மர்ம நபர்கள் தீ வைத்து எரித்து உள்ளனர்.

இது குறித்து கருங்கல் போலீஸ் நிலையத்தில் மகேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து எரித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News