உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

மணவாளக்குறிச்சியில் படிப்பகம் முன்பு மது அருந்தியதை தட்டிக் கேட்டவருக்கு அடி

Published On 2023-01-02 08:08 GMT   |   Update On 2023-01-02 08:08 GMT
  • 3 பேர் மீது வழக்கு
  • மணவாளக்குறிச்சி போலீசார் விசாரணை

கன்னியாகுமரி:

குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியை அடுத்த கல்படி சடையன் விளையை சேர்ந்தவர் ஜோதிநாத் (வயது 41), தொழிலாளி.

இவர் சம்பவத்தன்று அங்குள்ள படிப்பகத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அதே பகுதியைச் சேர்ந்த பிரின்ஸ், லிவிங்ஸ்டன், சிவா ஆகி யோர் வந்தனர்.

அவர்கள் படிப்பகம் அருகே மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த ஜோதிநாத், இங்கு வைத்து ஏன் மது அருந்து கிறீர்கள் என கண்டித்தார்.

இது தொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த 3 பேரும், ஜோதிநாத்தை தாக்கியதோடு கொலை மிரட்டலும் விடுத்ததாக மணவாளக்குறிச்சி போலீ சில் புகார் செய்யப் பட்டது.

அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி பிரின்ஸ், லிவிங்ஸ்டன், சிவா ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News