உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் பொறுப்பேற்பு

Published On 2023-10-20 07:14 GMT   |   Update On 2023-10-20 07:14 GMT
  • தமிழக அரசு ஆணையர் கண்ணனை கோவை மாவட்டத்தில் உள்ள நகரியல் பயிற்சி மைய இயக்குனராக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது.
  • முன்னதாக பொறியாளர் கணேசன், சுகாதார அலுவலர் அருள்நம்பி உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக கண்ணன் பணியாற்றி வந்தார். இந்நிலையில் தமிழக அரசு ஆணையர் கண்ணனை கோவை மாவட்டத்தில் உள்ள நகரியல் பயிற்சி மைய இயக்குனராக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது. மேலும் தாம்பரம் மாநகராட்சியின் துணை ஆணையராக பணி புரிந்து வந்த செந்தில்முருகனை காஞ்சிபுரம் மாநகராட்சியின் ஆணையராக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது.

இதன் பேரில் காஞ்சிபுரம் மாநகராட்சியின் 3-வது ஆணையராக செந்தில் முருகன் மாநராட்சி ஆணையரக அலுவலகத்தில் நேற்று முறைப்படி பதிவேட்டில் கையெழுத்திட்டு பணி பொறுப்பேற்றார். முன்னதாக பொறியாளர் கணேசன், சுகாதார அலுவலர் அருள்நம்பி உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News