உள்ளூர் செய்திகள்

பனங்காட்டுப்படை கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

Published On 2022-07-16 09:42 GMT   |   Update On 2022-07-16 09:42 GMT
  • ராக்கெட் ராஜா கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
  • பெண்களுக்கு தையல் மிஷன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

நெல்லை:

பெருந்தலைவர் காமராஜர் 120-வத பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. பனங்காட்டுப்படை கட்சி இளைஞரணி சார்பில் காமராஜர் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

திசையன்விளை நேருஜி கலையரங்கத்தில் நேற்று மாலை நடந்த இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக பனங்காட்டுப்படை கட்சி நிறுவன தலைவர் ராக்கெட் ராஜா நாடார் மற்றும் தட்சணமாற நாடார் சங்க செயலாளர் ராஜகுமார் நாடார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்காண ஏற்பாடுகளை பனங்காட்டுப்படை கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அந்தோணி நாடார் செய்திருந்தார். விழாவில் மாநில பொருளாளர் அருண்பாபு நாடார், மாநில இளைஞரணி செயலாளர் சத்திரியன்பாபு நாடார், தொழிலதிபர் பரமசிவன் நாடார், நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் நாடார், தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பன்னீர்செல்வம் நாடார், நாங்குநேரி ஒன்றிய செயலாளர் ஸ்ரீகாந்த் நாடார், ராதாபுரம் ஒன்றிய செயலாளர் நாராயணன் நாடார் மற்றும் நிர்வாகிகள் ஜெப்ரின் நாடார், தங்கதுரை நாடார், முத்துக்குட்டி நாடார், முத்துநாடார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

விழாவுக்கு வந்த ராக்கெட் ராஜா நாடாருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது. பலத்த கரகோஷங்களுக்கு இடையே அவர் காமராஜரின் பெருமை குறித்து மேடையில் பேசினார்.

இந்த விழாவின் போது மதியம் 1 மணி முதல் 6 மணி வரை பொதுமக்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. பெண்களுக்கு தையல் மிஷன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News