உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.

கடத்தூர் பேரூராட்சியில் பகுதி கிராம சபா கூட்டம்

Published On 2022-11-09 09:49 GMT   |   Update On 2022-11-09 09:49 GMT
  • கிராம சபா கூட்டம் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது.
  • அடிப்படை வசதிகளை முறையாக செயல்படுத்த வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

பாப்பிரெட்டிபட்டி,

கடத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 7 மற்றும் 8-வது வார்டு பகுதியில் பகுதி கிராம சபா கூட்டம் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் துணைத் தலைவர் வினோத், 8-வது வார்டு கவுன்சிலர் சபியுல்லா, 7-வது வார்டு கவுன்சிலர் சின்னபொண்ணு, மற்றும் கவுன்சிலர்கள் காமாட்சி, சரவணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் ரவீந்திரன், கணேசன், நகர துணை செயலாளர் பூ முருகன்,அம்பேத், ஜாதா, உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.

அவர்கள் தங்களது குடியிருப்பு பகுதிகளில் குடிதண்ணீர், தெரு விளக்கு, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக செயல்படுத்த வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

Tags:    

Similar News