உள்ளூர் செய்திகள்

கே.பூசாரிப்பட்டி அரசு பள்ளியில் மேசை, டெஸ்குகள்

Published On 2023-07-26 15:42 IST   |   Update On 2023-07-26 15:42:00 IST
  • தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்பில், 35 செட் மேசை, டெஸ்க்குகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
  • அசோக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, பெஞ்ச், டெஸ்க்குகளை மாணவர்களுக்கு வழங்கி பேசினார்.

கிருஷ்ணகிரி,  

கிருஷ்ணகிரி ஒன்றியம், காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி கே.பூசாரிப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 305 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.

ஆனால் போதிய மேசை, டெஸ்க் வசதியின்றி மாணவர்கள் தரையில் அமர்ந்து படித்து வந்தனர். இதையடுத்து பள்ளியின் சார்பில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ.விடம் பெஞ்ச், டெஸ்க் வேண்டும் என கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

இதையடுத்து தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்பில், 35 செட் மேசை, டெஸ்க்குகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் கன்னியப்பன், சோக்காடி ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அசோக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, பெஞ்ச், டெஸ்க்குகளை மாணவர்களுக்கு வழங்கி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், ஊராட்சி தலைவர் மஞ்சுளா, துணைத் தலைவர் நாராயணகுமார், கவுன்சிலர் மகேந்திரன், முன்னாள் கவுன்சிலர் ரமேஷ்குமார், ஆவின் தொழிற்சங்க மாநில துணைத் தலைவர் அருணாசலம், கூட்டுறவு முன்னாள் தலைவர் முருகேசன், கூட்டுறவு சங்க துணைத் தலைவர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News