நாவல் பழம் பறித்தபோது பரிதாபம் கிணற்றில் தவறி விழுந்த பெண் சாவு
- தாய் கிணற்றில் விழுவதை பார்த்த ஜோதிகா கூச்சலிட்டார்.
- ஜோதிகா கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே சூ.பாலப்பட்டு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். அவரது மனைவி தேவிகா (வயது 45) இவர் அதே கிராமத்தில் மதுரா காந்திநகர் பகுதியில் கண்ணன் என்பவரது கிணற்றின் அருகே உள்ள நாவல் மரத்தில் ஏறி நாவல் பழம் பறித்தார். கிணற்றின் அருகே இவரது மகள் ஜோதிகா நின்று கொண்டிருந்தார்.
அப்போது கால் தவறி தேவிகா 100 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்தார். தாய் கிணற்றில் விழுவதை பார்த்த ஜோதிகா கூச்சலிட்டார். அப்போது அருகில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் இதுகுறித்து தியாகதுருகம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் கிணற்றில் மூழ்கி இறந்து கிடந்த தேவிகா உடலை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஜோதிகா கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.