உள்ளூர் செய்திகள்

விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

ஒட்டன்சத்திரம் அருகே சந்தனக்குட விழா

Published On 2022-07-02 05:36 GMT   |   Update On 2022-07-02 05:36 GMT
  • திண்டுக்கல் அருகே சேக்பரித் ஒலியுல்லா (எ) சக்கரைபாவா சந்தனக்குட உருஸ் விழா நடைபெறுகிறது.
  • ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ரைஹானா மற்றும் சென்னை இறையன்பன் குத்தூஸ் ஆகியோர்களின் இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், புலியூர்நத்தம் ஊராட்சிக்குட்பட்ட குளிப்பட்டியில் சேக்பரித் ஒலியுல்லா (எ) சக்கரைபாவா சந்தனக்குட உருஸ் விழா நடைபெறுகிறது.

கடந்த 30ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழா வருகிற 16-ந் தேதியன்று சந்தனக்குட உருஸ் விழா நடைபெறுகிறது. 16-ந் தேதி மாலை வாசனை யுடன் போர்வை ஊர்வலம், அதிகாலை சந்தனம் வழங்குதல் நடைபெறும். அன்று மாலை ஹத்தமல் குர்ஆன் நிறைவுக்குப் பின்னர் புனிதக்கொடி இறக்குதல் நடைபெறுகிறது.

16-ந் தேதி இசைஅமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ரைஹானா மற்றும் சென்னை இறையன்பன் குத்தூஸ் ஆகியோர்களின் இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. உருஸ் விழா நாட்களில் வண்ண மின் விளக்குகளின் அலங்காரங்கள், வியப்பூட்டும் சிறப்பு வித்வான்களின் நாதஸ்வரங்கள், பேண்ட் செட் வாத்தியங்கள், நகைப்பூட்டும் நையாண்டி மேளங்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

எனவே அனைத்து மக்களும் தவறாது வருகை தந்து அருளைப் பெற்றுச் செல்லுமாறு ஹக்தார்ஹசன் பரீதீன் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News