உள்ளூர் செய்திகள்

பாசன வாய்க்காலில் குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகள்.

வலங்கைமான் அருகே பாசன வாய்க்காலை அடைத்து நிற்கும் பிளாஸ்டிக் கழிவுகள்

Published On 2022-07-03 09:52 GMT   |   Update On 2022-07-03 09:52 GMT
  • வாய்க்காலில் வரக்கூடிய தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்காக மூழால்வாஞ்சேரி, கோட்டச்சேரி, சாலபோகம், வெங்காய களஞ்சேரி ஆகிய கிராமங்கள் காத்து க்கொண்டிருக்கிறது.
  • பிளாஸ்டிக் கழிவுகள் அடைத்து தண்ணீரை தடை செய்யும் விதமாகவும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது.

நீடாமங்கலம்:

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா உத்தமதானபுரம் கிராமத்தில் பாசனம் செய்யும் வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள் முழுவதுமாக நிரம்பி உள்ளன.

இந்த வாய்க்காலில் வரக்கூடிய தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்காக மூழால்வாஞ்சேரி, கோட்டச்சேரி, சாலபோகம், வெங்காய களஞ்சேரி ஆகிய கிராமங்கள் காத்துக்கொண்டிருக்கும் நிலையில், இப்படி பிளாஸ்டிக் கழிவுகள் அடைத்து தண்ணீரை தடை செய்யும் விதமாகவும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது.

இதை உடனடியாக பாசனத்திற்கு ஏற்ற வகையில் அகற்றி தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News