உள்ளூர் செய்திகள்

கூட்டுறவு சங்கங்களின் விற்பனையாளர், கட்டுனர் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு: ஏராளமானோர் பங்கேற்பு

Published On 2022-12-15 12:20 GMT   |   Update On 2022-12-15 12:20 GMT
  • தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
  • விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆவணங்களை கொண்டு வந்து அதிகாரியிடம் சமர்ப்பித்து சரிபார்த்தனர்.

திருவள்ளூர்:

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களில் 198 விற்பனையாளர்கள் பணியிடங்கள் மற்றும் 39 கட்டுநர் பணியிடங்கள் காலியாக உள்ளது.

இதனை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து கூட்டுறவு சங்கங்களின் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்தனர்.

அவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கு இன்று நேர்முகத் தேர்வு தொடங்கியது. இதற்காக ஏற்கனவே விண்ணப்பத்தவர்களுக்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து இன்று காலை திருவள்ளூரில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் கூட்டுறவு சங்கங்களின் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான விண்ணப்பதாரர்கள் குவிந்தனர்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆவணங்களை கொண்டு வந்து அதிகாரியிடம் சமர்ப்பித்து சரிபார்த்தனர். அதை தொடர்ந்து அதிகாரிகள் நேர்முகத் தேர்வு நடத்தினார்கள்.

வருகின்ற 29ஆம் தேதி வரை இந்த நேர்முகத் தேர்வு நடைபெறும் என கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சண்முகவள்ளி தெரிவித்தார்.

Tags:    

Similar News