உள்ளூர் செய்திகள்

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்.


கொடைக்கானலில் விபத்துகளை ஏற்படுத்தும் கால்நடைகளை அகற்ற வலியுறுத்தல்

Published On 2023-01-03 10:39 IST   |   Update On 2023-01-03 10:39:00 IST
  • கொடைக்கானல் நகர் மற்றும் போக்குவரத்து நிறைந்த பிரதான சாலைகளில் வளர்ப்பு மாடுகள் அதிகளவு உலா வருகின்றன.
  • சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்

கொடைக்கானல்:

கொடைக்கானல் நகர் மற்றும் போக்குவரத்து நிறைந்த பிரதான சாலைகளில் வளர்ப்பு மாடுகள் அதிகளவு உலா வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு வாகன ஓட்டுநர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.

ஏற்கனவே காட்டெருமைகள் நகருக்குள் உலா வந்து பீதியை ஏற்படுத்தி வரும் நிலையில் வளர்ப்பு மாடுகளும் அடிக்கடி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றன. பெரும்பாலான சாலைகள் சேதமடைந்துள்ள நிலையில் அந்த சாலைகளிலும் வளர்ப்பு மாடுகள் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் தவறிவிழுந்து விபத்தில் சிக்கிவிடுகின்றனர்.

சுற்றுலா வாகனங்களும், பள்ளிக்கு மாணவர்களை அழைத்துச்செல்லும் வாகனங்களும் அடிக்கடி சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் இதுபோல் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் கடைபிடிக்கும் முறையை போல கால்நடைகளை பிடித்து நடவடிக்கை எடுத்து அதனை ஏலம் விட்டால் அதன் உரிமையாளர்களுக்கு ஓரளவு சமூகஅக்கறை ஏற்படும்.

Tags:    

Similar News