உள்ளூர் செய்திகள்

ஆதரவற்ற விதவைகள் சான்று பெற ஆண்டு கணக்கில் காலதாமதம்

Published On 2023-05-01 09:57 GMT   |   Update On 2023-05-01 09:57 GMT
  • விதவைகள் சான்று பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கின்ற னர்.
  • திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., கவுசல்யா ஆதரவற்ற வித வைகள் விண்ணப்பத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வுக்கு உட்பட்ட பகுதிகளில் கணவனை இழந்த இளம்பெண்கள் அரசு நலத்திட்ட உதவிகளை பெறவும், வேலை வாய்ப்பில் முன்னுரிமை பெறவும் ஆதரவற்ற விதவைகள் சான்று பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கின்ற னர்.

இந்த நிலையில் இருப்பி டச் சான்று, வாரிசு சான்று, வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட வற்றிக்கு விண்ணப்பித்தால் ஒரு சில நாட்களில் கிடைத்து விடுகிறது. ஆனால் ஆதர வற்ற விதவைகள் சான்றுக்கு விண்ணப்பித்தால் வருட கணக்கில் காலதாமதமாகி வருவதால் பயனாளிகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இதேபோல், ஆதரவற்ற விதவைச் சான்றுக்கு சப்-கலெக்டர் ரேங்கில் உள்ள வர்கள் மட்டுமே நேரடி யாக சம்பந்தப்பட்டவர்கள் வீட்டிற்கு சென்று ஆய்வு செய்து வழங்குவார்கள்.

ப.வேலூர் தாலுகா உட்பட்ட ஆதரவற்ற விதவைகள் விண்ணப்பம் அனைத்தும் ப.வேலூர் தாசில்தார் அலுவலகத்தில் ஆய்வு செய்து, திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கின்றனர்.

ஆனால் அங்கு செல்லும் ஆதரவற்ற விதவைகள் விண்ணப்பம் கிடப்பில் போடப்படுகிறது.

இதனால் சான்றுபெற விண்ணப்பித்த வர்கள் கடும் அதிருப்தியில் உள்ள னர். தற்போது புதிய தாக பதவியேற்ற திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., கவுசல்யா ஆதரவற்ற வித வைகள் விண்ணப்பத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News