உள்ளூர் செய்திகள்

சேலம் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களுக்கு ஊக்கத்தொகை

Published On 2022-12-06 14:49 IST   |   Update On 2022-12-06 14:49:00 IST
  • 2022-2023 -ம் ஆண்டு முதல் முன்னாள் படைவீரர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் சைனிக் பள்ளியில் பயில்வதற்கு ஆண்டிற்கு ரூ.25,000 ஊக்கத்தொகையாக 23.09.2022 முதல் வழங்கிட முடிவு செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
  • கல்வியுதவித் தொகை வழங்கிட தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்டு தமிழ்நாட்டில் வசிக்கும் அலுவலர் தகுதிக்கு கீழ் உள்ள முன்னாள் படைவீரர்களாக இருக்க வேண்டும்.

சேலம்:

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

தொகுப்பு நிதியின் மாநில மேலாண்மை குழுக் கூட்டத்தில் 2022-2023 -ம் ஆண்டு முதல் முன்னாள் படைவீரர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் சைனிக் பள்ளியில் பயில்வதற்கு ஆண்டிற்கு ரூ.25,000 ஊக்கத்தொகையாக 23.09.2022 முதல் வழங்கிட முடிவு செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் நடப்பு கல்வியாண்டு 2022-2023 முதல் முன்னாள் படைவீரர் சிறார்களுக்கு மத்திய அரசின் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், என்.எல்.எஸ் போன்ற நிறுவனங்களில் பயில்வதை ஊக்குவிக்கும் பொருட்டு 23.09.2022 முதல் உயர் கல்வி பயில்வதற்கு ஊக்கத் தொகையாக ஆண்டிற்கு ரூ.50,000 வழங்கிட குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

கல்வியுதவித் தொகை வழங்கிட தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்டு தமிழ்நாட்டில் வசிக்கும் அலுவலர் தகுதிக்கு கீழ் உள்ள முன்னாள் படைவீரர்களாக இருக்க வேண்டும். உயர் கல்வியில் ஊக்கத்தொகை பெறுவதற்கு தகுதியுள்ள படிப்புகளுக்கு சேரும்போது முன்னாள் படைவீரரின் மகன்களுக்கு 25 வயதிற்குள்ளும் மகள்களுக்கு திருமணம் ஆகும் வரையும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

முன்னாள் படைவீரரின் மனைவி மற்றும் கைம்பெண்க–ளுக்கு வயது வரம்பு கிடையாது. இவ்வுதவித்தொகை 2022-2023-ஆம் கல்வி ஆண்டு முதல் விண்ணப்பித்து பயனடையலாம்.மேலும் விவரங்களுக்கு சேலம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அவர், அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News