உள்ளூர் செய்திகள்
ஊத்துக்குளியில் பயிர் காப்பீடு குறித்த சிறப்பு முகாம்
- சிறு, குறு விவசாயி சான்று பெறவும் விண்ணப்பம் அளித்தனர்.
- வேளாண்மை அலுவலர் மாரியப்பன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஊத்துக்குளி:
ஊத்துக்குளி தாசில்தார் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான கிசான் கடன் அட்டை மற்றும் பயிர் காப்பீடு தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் வருவாய்த்துறையை சேர்ந்த தாசில்தார் தங்கவேல், வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வேளாண்மை உழவர் நலத்துறையை சேர்ந்த வேளாண்மை உதவி இயக்குனர் சசிரேகா, வேளாண்மை அலுவலர் மாரியப்பன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முகாமில் பயிர் காப்பீடு செய்ய தேவையான அடங்கல் மற்றும்பிற ஆவணங்களை விவசாயிகள் பெற்று சோள பயிருக்கு பயிர் காப்பீடு செய்தனர். சிறு, குறு விவசாயி சான்று பெறவும் விண்ணப்பம் அளித்தனர்.
முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் அம்பாயிரநாதன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு சான்றுகளை வழங்கினார்.