உள்ளூர் செய்திகள்

வெள்ளக்கோவிலில் விஷம் கலந்த கிணற்று தண்ணீர் ஆய்வு

Published On 2023-01-18 07:13 GMT   |   Update On 2023-01-18 07:13 GMT
  • திருமங்கலத்தில் ஊா்மக்கள் பயன்படுத்தும் பொதுக்கிணறு உள்ளது.
  • கிணற்றின் தண்ணீா் மாதிரி எடுத்து திருப்பூரில் உள்ள ஆய்வகத்துக்கு பரிசோதனை செய்ய அனுப்பப்பட்டுள்ளது.

வெள்ளகோவில் :

வெள்ளக்கோவில் நகராட்சிக்கு உள்பட்ட திருமங்கலத்தில் ஊா்மக்கள் பயன்படுத்தும் பொதுக்கிணறு உள்ளது. இந்த கிணற்று நீரில் விஷம் கலந்துள்ளதாக வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், அதே பகுதியைச் சோ்ந்த சண்முகம், பத்மாவதி தம்பதி மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில் கிணற்றின் தண்ணீா் மாதிரி எடுத்து திருப்பூரில் உள்ள ஆய்வகத்துக்கு பரிசோதனை செய்ய அனுப்பப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் கிடைக்கப் பெற்றவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனா்.

Tags:    

Similar News